Monday 13 July 2015

Saturday 11 July 2015

திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் இந்துஸ்தான் கல்லூரிச் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னியப்பன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.


திருக்குறள் கல்வெட்டுக்கள் விழாவில் இந்துஸ்தான் கல்லூரிச் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னியப்பன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.



Thursday 9 July 2015

Wednesday 8 July 2015

திருக்குறள் கல்வெட்டு நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி...கோத்தகிரி கொடநாடு சேர்ந்த திரு.ஆண்டி அவர்கள்.


திருக்குறள் கல்வெட்டு நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி...கோத்தகிரி கொடநாடு சேர்ந்த திரு.ஆண்டி அவர்கள்



Monday 6 July 2015

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்.

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்.




Friday 3 July 2015

நூல் பாகம் 1


திருக்குறள் கல்வெட்டுக்கள்
ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்திலுள்ள மலையில்1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து மனு அளித்துவந்தது. இது சம்பந்தமாக பல கூட்டங்களையும் மாநாடுகளையும் இச்சங்கம் நடத்தி வருகிறது. அதன் பயனாக 11.02,2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த குறள் மலையை ஆய்வு செய்தனர். அப்போது மலையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக்கல்வெட்டுக்களைப் பார்த்து பிரமிப்படைந்தனர். அதோடு 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதற்கு இந்த மலை மிகவும் பொருத்தமாக மலையாக உள்ளது என்றும், இது சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கயை விரைவில் அரசுக்கு சமர்ப்பிப்போம் என்று கூறிச்சென்றனர்.
மெலும்  இது சம்பந்தமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக தமிழ் வளர்ச்சித்துறையின் இணைஇயக்குநர் திருமதி சந்திரா அவர்கள், ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை செயற்பொறியாளர் திரு எஸ்.சேகர் அவர்கள், இந்து அறநிலையத்துறை இணைஆணையர் அவர்கள் மற்றும் இ.ஓ திருமதி மாலா அவர்கள் மேலும் பொதுநல ஆர்வலர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த திரு.எம்.இரத்தினம் அவர்கள் ஆகியோர் கொண்ட நால்வர் குழுவை நியமித்து அரசு ஆய்வு செய்யப்பணித்தது.
அதன்படி மேற்படி அரசு அதிகாரிகள் அனைவரும் 14.05.2015 வியாழன்று குறள்மலையை ஆய்வுசெய்தனர். ஆய்வின்முடிவில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்க இந்த இடம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது என்றும் இது சம்பந்தப்பட்ட இறுதி அறிக்கையை விரைவில் நாங்கள் அரசுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறிச்சென்றனர்.
ஆய்வின்போது அரசு அதிகாரிகளுடன் குறள் மலைச்சங்கத்தினர், மாமல்லபுரம் சிற்பி அரவிந்தன், மற்றும் ஊர்ப்பொதுமக்கள் உடனிருந்தனர்.
எங்களது கோரிக்கையை அரசு மிகவும் ஆர்வத்துடன் பரிசீலித்து வருகிறது. குறள் மலை அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பல நாட்டு அறிஞர்களுடன் கலந்தாய்வுசெய்து, தெளிவாக அரசிடம் சமர்ப்பித்துவிட்டோம். அரசின் ஆய்வுகளும் இறுதிநிலையை அடைந்துள்ளது. ஆகவே அரசாணை வெளியிடப்படும் நாளை ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறோம். 1330 குறள்களையும் விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக்கி திறப்புவிழாவிற்கான திறவுகோளை இரண்டே ஆண்டுகளில் அரசிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்திருக்கிறோம். மாமல்லபுரம் சிற்பிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த கல்வெட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இது சம்பந்தமாக ’திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாடு’ கோயமுத்தூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ’கல்வெட்டில் திருக்குறள் பாகம்1’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திருக்குறள் ஏன் கல்வெட்டுக்களாக்கப்படவேண்டும் என்பதுபற்றி அறிஞர்பெருமக்கள் பலரும் கட்டுரை வாயிலாக தங்கள் கருத்துக்களை பதிவுசெய்திருந்தார்கள்.
இந்நூல் சென்னையில் கன்னிமேரா நூலகத்திலும், பாரதியார் இல்லத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலும் மேலும் பல நூறு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும், இங்கிலாந்தில் லண்டன் ஹைகோர்ட்டிலும், லண்டன் தமிழ்ச்சங்கத்திலும், ஐரோப்பிய கலை கலாச்சாரக்கழகத்திலும், ஜப்பான் கலாச்சார நூலகத்திலும், இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்திலும், அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நூலகத்திலும், ரஷ்யாவின் கிரம்ளின் நூலகத்திலும், மேலும் தமிழர்கள் வாழும் பல நாடுகளின் நூலகங்களிலும் பயன்பாடுகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ’கல்வெட்டில் திருக்குறள் பாகம்2’ நூல் விரைவில் வெளிவர உள்ளது. இஸ்ரோ இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கரங்களால் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாரது தேதிக்காக காத்திருக்கிறோம்.

கல்வெட்டுப் பணிகளுக்காக எம்மோடு பல பன்னாட்டு அறிஞர்கள்                         ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுக்களாக்குவது  சம்பந்தமாக இலண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும், இலண்டன் ஹைகோர்ட் மொழிபெயர்ப்பியல்துறைத் தலைவரும், தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்கள், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏசியன் ஸ்டடீஸ் இயக்குனரான திரு.ஜான் சாமுவேல் அவர்கள், ஜெர்மனி ஹம்பர்க் பல்கலைக் கழகத்தின் பல்கலை ஆய்வாளர் டாக்டர்.பார்பரா ஸ்கூலர் அவர்கள் ஆகியோருடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Thiru.Siva Pillai
Educational Studies
Goldsmiths College, University of London  (retired)
Director Tamil Academy of Language & Arts 
Principal  Examiner for Edexcel Tamil Language                                                                                                         
And                                                                                                                                                Dr. Barbara Schuler
Universität Hamburg
Asien-Afrika-Institut
Indian and Tibetan Studies
Alsterterrasse 1
20354 Hamburg, Germany