Friday 3 October 2014

திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாடு 21.09.2014 அன்று கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடந்து முடிந்தது. 
குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார் அவர்கள், கோவை இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் நா.பாலுசாமி அவர்கள், சிந்தனைக் கவி. கவிதாசன் அவர்கள், பேரூர் ஆதீனம் முனைவர் தவத்திரு.மருதாசல அடிகளார், கோவை மெடிகல் நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள், கோவை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி ஞானகெளரி அவர்கள், வி.ஜி.பி. உலகத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. வி.ஜி.சந்தோசம் அவர்கள், கெளமார மடாலயம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.செ.ராசு அவர்கள், கோவை இந்துஸ்தான் கல்லூரி செயலர் திருமதி சரஸ்வதி, குறள்செல்வி தேச.மங்கயர்கரசி அவர்கள், வேளாண் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர்.ராமசாமி அவர்கள், ஆகியோர் திருக்குறள் கல்வெட்டுக்களின் அவசியம் பற்றிய தங்களது உரையை வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 









1 comment:

  1. நல்ல பணி
    செயல்பாட்டுக்கு வரவேண்டும்

    ReplyDelete